Posts

Showing posts from September 3, 2019

சபாஷ்..நன்னா பண்ணியிருக்கியே பா....

Image
                                காலங்களிலே மிகவும் கொடுமையான காலம் எது தெரியுமா?இந்த படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திரிவது  ! !  "எங்கப்பன் என்ன இன்னா டார்ச்சர் பண்ணுனான் தெரியுமா இந்த வேலைகிடைக்காம தின்ன நேரத்துல "என்று எல்லா அப்பாக்(ன்)களும் தன் மகன் மகளிடம் புலம்புகிறார்கள்.ஆனால் ஏனோ தெரியவில்லை அவர்களும் அதையேத் தான் செய்கிறார்கள்.முரணாக தோன்றவில்லை?? அவர்களும் எத்துணை நாட்கள் தான் பாரத்தை தாங்குவார்கள் ..   நியாயம்தான் .அட வேண்டுமென்றா தெண்ட சோறு தின்னுகிறார்கள் பிள்ளைகள்?உங்க காலத்தில் பத்தாங்கிளாஸ் அவர்களுக்கு கிடைத்த வேலைக்கூட இந்த காலத்தில் ஒரு என்ஜினியர் பயலுக்கோ டாக்டர் பொண்ணுக்கோ கிடைப்பதில்லைங்க ..எங்க போவோம் நாங்க ?தேமேன்னு படிச்சுக்கிட்டு இருந்தோம் சமசீர் கல்வினானுங்க ,சரி கும்பலா நூத்துக்கு நூறெல்லாம் எடுத்து காட்டுனோம் ,நீட் தேர்வுனானுங்க ,முட்டியடிச்சி உள்ள நுழைஞ்சா பாஸ் ஆகவே ததிகிணத்தோம் ஆடவேண்டியதா இருக்கு ,டிஸ்டிங்க்ஷன்லாம் வாங்கிகிட்டு வெளிய வந்தா நெஸ்ட்டுன்றானுங்க ,நடு காட்டுல நின்னுகிட்டு முன்னாடி போனா  முட்டுவானுங்க பின்னாடி வந்தா ஒதைக்குறானு