Friday 22 August 2014

வாழ்க்கைன்னா இன்னான்னா......!!??

                சமீபத்தில் கிடைத்த ஒரு பத்து  நிமிட சிநேகம்,என்னை இதோ இங்கே வரவழைத்து இருக்கிறது ! அந்த அம்மாவிற்கு ஒரு ஐம்பது வயது இருக்கலாம்.கையில் ஒற்றை பை.அவரும் என்னை போல பேருந்திர்க்காகதான் காத்துக்கொண்டு இருக்கவேண்டும் ."ஒரு நிமிஷம்!இந்த பையை பாத்துக்கோங்க.இதோ வந்துவிடுகிறேன்." என அவசரமாக டிக்கெட் ரிசெர்வ்  செய்ய ஓடிய நான், திரும்பி வரும்போது,அவர் இரு கைகளையும் இருக்கை மீது வைத்து இடம் பிடித்து வைத்திருக்கும் காட்சியை பார்த்தவுடன், சிறிதாக புன்னகைத்துவிட்டு, மெல்லிய குரலில் நன்றி சொல்லி அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் எங்கள் உரையாடல் தொடங்கியது.