Sunday 15 September 2019

FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!

                               Ring-a-Ring-a Rosies
                               Pocket full-a-Posies?
                             
Fungal infection-spmadhu.blogspot.com
                              Yeah....Round round eruptions, dirty, with intolerable itching, causing burning and redness, sometimes oozing fluids, sometimes peeling of skin, is that your problem? You feel didgusting and hesitate to expose the skin outside? This reckless is nothing but 'Fungal infection' or 'Ringworm'.In medical terms it is called 'Tinea'.Try Homoeopathy and get rid of this.

                             
Tinea capitis-spmadhu.blogspot.com
                               If this skin condition comes on the scalp of your head ,it is called 'Tinea capitis'.Probable symptoms may be itching, dryness, hairfall, peeling of skin etc.This can be misinterpreted as Dandruff usually.

                             
Tinea cruris-spmadhu.blogspot.com
                                Some will  get this in the private parts which makes the situation very uncomfortable.It spreads to the whole inner thighs leaving blackish discoloration.This one is named 'Tinea cruris'.This wont allow you to dress in fit.The burning increases while changing dress,on sweating.

                             
Tinea pedis-spmadhu.blogspot.com
                                If it comes on the nails of the leg and in between ,it is called 'Tinea pedis'.This is generally white in color with peeling of skin, itching, oozing discharge.It increases while you wear shoes and off the aeration.

                             
Onychomycosis-spmadhu.blogspot.com
                                This can also develop on finger nails naming Onychomycosis.Sometimes its painful,oozes discharge,becomes red.Nails look unhealthy.

                               
Tinea corporis-spmadhu.blogspot.com
                                This condition can engage any part of our body .This is called 'Tinea corporis'.

                             
Tinea? Ringworm?Homoeopathy-spmadhu.blogspot.com
                                Homoeopathy has complete cure for fungal infections.Your Homoeopathic Doctor may give you sweet pills, or powdered medicine,or a water dose.He may also give Tinctures and oinments to apply on that if needed.And taking these medicines regularly gives you a perfect cure.

                                Let's just check why these infections,ringworm comes..
What causes fungal infection?spmadhu.blogspot.com

  1. If there is a direct contact with the infected person.Use of towels, soap, combs used by the infected person.
  2. Naturally, our body commensals increase and our immune system fails to fight with that leading to fungi multiplication.
  3. Then,Diabetic patients are prone to this.
  4. Overweight, Obese people , Increased sweating may aggravate this condition.
  5. Frequent use of Antibiotics may be the cause of this,says a new research.
                               
Vaginal candidiasis-spmadhu.blogspot.com
                            Some women suffer from white discharge( Leucorrhea) which comes under this category.It is technically called VAGINAL CANDIDIASIS.This has the chance of spreading to the partners also.Let's see how to safeguard ourselves from these fungal infections.
Fungal infection-spmadhu.blogspot.com
spmadhu.blogspot.com

  • Have your own towel, soap, comb, bedsheets etc.Do not use others.
  • Avoid walking bare foot.
  • Do not wear tight innerwares.Prefer cotton wardrobes especially during summer.
  • Maintain proper hygiene.
  • Control Diabetes.There is no other go.Some women complaints of increased vaginal discharge when their sugar level increases.
  • Dry clothes under sun.Its a natural antibacterial agent.This is my opinion.
  • Try to take immediate steps as soon as you notice your first eruption.Don't give time for that to spread its existence.Curb it at the start.
                              Follow my blog.Subscribe to my Youtube channel for a video- audio presentation.Share maximum and create awareness.You know,You are the creator of your own destiny.
Youtube channel: SP Madhu
Youtube link: https://www.youtube.com/watch?v=Yz2KroeeTAw&t=3s

                   

Sunday 8 September 2019

பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble

                     
Worm trouble-spmadhu.blospot.com
                 
Worms-spmadhu.blogspot.com
பூச்சி தொந்தரவு-Worm Trouble எல்லா வயதினருக்கும் வரக்கூடியது.ஹோமியோபதியில் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.இவை ஒன்றுமில்லை...வித விதமான புழுக்கள்.கொஞ்சம் அருவருப்பாகத் தோன்றினாலும் அதுதான்.ஆமாம்.பாக்டீரியா, வைரஸ், போல இதுவும் நம் உடம்புக்குள் புகுந்துக்கொண்டு செய்யும் சேட்டையைத்தான் Worm Trouble, பூச்சிக்கடி, புழுச்சிக்கல்,குடல்புழுக்கள், புழு நெண்டுது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

                 

spmadhu.blogspot.com
முதலில் புழு கலங்கப்பட்ட நீர்நிலையிலோ, மண்ணிலோ, அந்த தண்ணீரில் செய்த சாப்பாட்டிலோ இருக்கும்.அங்கிருந்து நேராக குடலிற்கு சென்று குட்டி போட்டு வளரும்.பின் ஒவ்வொரு உறுப்பாக சென்று வியாதியை வெளிப்படுத்தும்.உதாரணத்திற்கு,திருப்பதி தேவஸ்தானம் சென்றால்,ஒரு காத்திருப்பு அறை தரப்படும்.சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம்.பின்பு வரிசையில் மீண்டும் தொடர்ந்து சன்னதியை சென்றடைவோம்.

                   
Intestinal worms-spmadhu.blogspot.com
                 அதே மாதிரி இந்த புழுக்களும் உடம்பில் ஏதேனும் ஒரு வழியில் நுழைந்தப் பின்,குடலுக்கு சென்று வளர்ந்து பெருகும்.பிறகு,ஒவ்வொரு பாகமாக தாக்க தொடங்கும்.இதுதான் பொதுவான அதனுடைய வாழ்க்கை சுழற்சி.இதனால்தான் இதை குடல்புழு (Intestinal worms) என்கிறார்கள்.

                   நிறைய வகையான புழுக்கள் இருக்கின்றன.

THREADWORM
Threadworm-spmadhu.blogspot.com

PINWORM (ஊசிப்புழு)
Pinworm-spmadhu.blogspot.com

TAPEWORM (நாடாப்புழு)
Tapeworm-spmadhu.blogspot.com

WHIPWORM (சாட்டைப்புழு)
Whipworm-spmadhu.blogspot.com

HOOKWORM (கொக்கிப்புழு)
Hookworm-spmadhu.blogspot.com

ROUNDWORM(உருண்டைப்புழு)

Roundworm-spmadhu.blogspot.com

                 நம் வீட்டிலேயே குழந்தைகள் நாம் மட்டும் இருந்தால் ஒரு மாதிரி இருக்கும்.விருந்தாளிகள் வந்தால் வேறு  மாதிரி இருக்கும்.ஒன்று,அமைதியாகிவிடும் அல்லது அதிகம் வால்தனம் செய்யும்.அதே போல்தான்,நம் உடம்பிலும் 'புழு' என்கிற Foreign body, guest வந்தவுடன் நம் உடல் மக்கர் செய்ய ஆரம்பித்துவிடும்.பொதுவான அறிகுறிகள்,
Diarrhoea-spmadhu.blogspot.com

  • வயிறு வலி
  • வயிற்றுப்போக்கு 
  • வாந்தி 
  • கேஸ் 
  • ஆசனவாயில்அரிப்பு 
  • உடல் எடை குறைதல் 
  • இருமல் 
  • மூச்சுத்திணறல் 
               குழந்தைகளை அதிகம் குறிவைக்கும் புழு Enterobius vermicularis எனப்படும் ஊசிப்புழு(Pinworm).இது போன்ற புழுக்களை குழந்தையின் மலத்திலிருந்தே கண்டுபிடிக்கலாம்.'Stool examination' என்றொரு டெஸ்ட் உள்ளது.அதில் நுண்ணோக்கி (microscope) மூலம் அது எந்த வகை புழு என கண்டுப்பிடித்து சொல்வார்கள்.

             
Homoeopathy for worms-spmadhu.blogspot.com
                 ஹோமியோபதியில் இதற்கு  அருமையான மருந்துகள் உள்ளன.உதாரணத்திற்கு,சினா(Cina ) என்றொரு மருந்து உள்ளது.ஆசனவாயில் அரிப்பு,வயிற்றுப்போக்கு,குழந்தைகள் இனிப்பு நன்றாக சாப்பிடும் ஆனால் சாப்பாடு அவ்வளவாக சாப்பிடாது.அடம் பிடிக்கும்.தூங்கும்பொழுது பல் கடிக்கும்.திடீரென்று இரவில் கனவு கண்டு எழுந்து அழும்...இவையெல்லாம் 'சினா'வினுடைய அறிகுறிகள்.

                பெரியவர்களுக்கும் பூச்சிக்கடி வரும்.அதற்கும் ஹோமியோ மருந்துகள் இருக்கின்றன.ஆகையினால் இப்படி தொந்தரவுகள் வந்தால் எப்படி சொல்வது? என்ன செய்வது? என்று தெரியாமல் பூச்சிமாத்திரை எடுத்துக்கொண்டு இருக்காதீர்கள்.சீக்கிரமாகவே ஒரு நல்ல ஹோமியோ மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

உங்களுக்காகவே Youtube வீடியோ வடிவத்தில் .....
https://www.youtube.com/watch?v=XDQzOU3iCGA&t=3s
Please Subscribe my channel to get know about more videos.

              

Friday 6 September 2019

படர்தாமரை -FUNGAL INFECTION,RINGWORM -Treated by HOMOEOPATHY

                   
Fungal infection-spmadhu.blogspot.com


                   
spmadhu.blogspot.com
 'வட்ட வட்டமாய் படர்தாமரை ,அரிப்பு,வெளியே செல்ல சங்கடமாய் உள்ளது.முழுமையாக மறைக்கும் ஆடைகளையே அணிகிறேன்'  என்பவரா நீங்கள் ?கையை எடுக்காமல் சொறிகிறேன் ,வேர்க்கும்பொழுது மிகவும் பாடாய் உள்ளது.'அந்த இடத்தில்' கூட விட்டுவைக்கவில்லை என புலம்புகிறீர்களா ?ஹோமியோபதி மருந்து எடுத்து
பாருங்கள்.மேற்சொன்ன அறிகுறிகளையெல்லாம் சேர்த்து Fungal infections என்பார்கள்.பங்கஸ் என்பது பாக்டீரியா, வைரஸ் போன்றது.நுண்ணியிர் (Microorganism ) வகையில் வரும்.இதன் தோத்து தான் Fungal infection.வட்ட வட்ட வடிவத்தில் வருவதனால் இதனை Ringworm என்றும் அழைப்பார்கள்.மருத்துவ மொழியில் சொன்னால் 'Tinea'.

                     


                      வட்ட வட்டமாக தலையில் வந்தால் Tinea capitis என்பார்கள்.அரிப்பு, வறண்ட தோல்,முடி உதிர்தல், தோல் உரிதல்,சில பேருக்கு தண்ணிர் போல் வடிவது இப்படியெல்லாம் இருக்கும்.இதை பொடுகு என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.

Tinea cruruis-padarthaamarai-spmadhu.blogspot.com

                      சிலருக்கு அந்தரங்க இடத்தில், தொடைகளின் உட்புறத்தில் அரிப்பு போன்று தொடங்கி கருப்பு படையாக   வளர்ந்துவரும்.இதன் பெயர் Tinea cruris.இதுவும் உள்ளாடை போட விடாமல் அரிப்பெடுக்கும்.விடாமல் சொரிய எரிச்சல் வரும்.குளிர்ந்த தண்ணீர் பட்டால் பயங்கர எரிச்சல், காந்தல் இருக்கும்.

Tinea pedis-arippu-spmadhu.blogspot.com

                      கால் நகங்களில்,விரல் இடுக்குகளில் வெள்ளை வெள்ளையாக தோல் உரியும்.இது தான் Tinea pedis. ஷூஸ் அணிபவர்களுக்கு இன்னும் அதிகமான தொந்தரவு தரும்.சேற்று புண்ணோடு இதனை வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.

Onychomycosis-spmadhu.blogspot.com

                     கை விரல்களில் கூட Fungal infection வரலாம்.அதனை Onychomycosis என்பார்கள்.நகங்கள் மிகவும் ஆரோக்கியம் இழந்து காணப்படும்.

padarthaamarai-fungal-spmadhu.blogspot.com

                     பொதுவாக வேறு எந்த பாகங்களை பாதித்தாலும் அதனை Tinea corporis என்று அழைப்பார்கள்.

Ringworm-homoeopathy-spmadhu.blogspot.com

                      ஹோமியோபதி இது எல்லாவற்றிற்கும் தீர்வு கண்டுள்ளது.உங்கள் ஹோமியோ மருத்துவர் உங்களுக்கு இனிப்பாக இருக்கக்கூடிய மாத்திரைகளை தருவார்.அல்லது பொடி மருந்து,தண்ணீரில் கலந்து சாப்பிடுவது போன்றவற்றை தரலாம்.தேவைப்பட்டால், படர்தாமரையின் மேல் தடவக்கூடிய டிங்சர்(Tincture), oinments போன்றவை தரலாம்.இதை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வர இதிலிருந்து பூரண குணம் கிடைக்கும்.

                    Fungal infections எதனால் வருகிறது என்று பார்த்தோமானால்,

  • ஒன்று, நேரடியாக இன்பெக்க்ஷன் உள்ளவரிடம் தொடர்புக் கொள்ளுதல்.அதாவது அவர் உபயோகித்த துண்டு, சோப்பு, சீப்பு போன்றவற்றை பயன்படுத்தினால் பரவலாம்.
  • இரண்டு, நம் உடம்பில் இயற்க்கையாக இருக்கக்கூடிய Fungi பெருகி நம் நோயெதிர்ப்பு சக்தியால் சமாளிக்கமுடியாமல் வரலாம்.
  • பின் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது எளிதில் பரவும்.
  • உடல் பருமன் உள்ளவர்கள், அதிகம் வேர்வை தொந்தரவு உள்ளவர்களுக்கு சீக்கிரம் வரும்.
  • ஆன்டிபையாடிக்ஸ்  அதிகம் எடுப்பவர்களுக்கு கூட இது வரலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
                 
Leucoorhoea-itching-spmadhu.blogspot.com

                   பெண்களுக்கு வெள்ளைப் படுத்தல் போன்ற பிரச்சனைகளும் இதில் அடங்கும்.Vaginal  Candidiasis என்று அழைப்போம்.அது தம்பதிகளிடையே மற்றவர்க்கும் பரவும் வாய்ப்பு உள்ளது.இவற்றிலிருந்து எல்லாம் எப்படி பாதுகாத்துக்கொள்வது என பாப்போம்.
  • உங்களுக்கென்று தனியே துண்டு, சீப்பு, சோப்பு , போர்வை, போன்றவைகளை வைத்துக்கொள்ளுங்கள்.முடிந்த வரை அடுத்தவர்களுடையதை பயன்படுத்தாதீர்கள்.
  • வெறும் காலோடு நடப்பதை தவிர்க்கவும்.
  • மிகவும் டைட் ஆன இழுத்து பிடிக்கும் ஆடைகள் வேண்டாம்.பருத்தி ஆடைகளை தேர்ந்தெடுங்கள்.முக்கியமாக வெயில் காலங்களில்.
  • படர்தாமரை வந்த இடங்கள்,மற்றும் அந்தரங்க இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • சர்க்கரை நோய் ,சுகர் உள்ளவர்கள் அதனை குறைவான அளவில் வைத்துக்கொள்ளுங்கள்.வேறு வழியில்லை .சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல்,எரிச்சல், இதெல்லாம் சர்க்கரை அதிகமாகும் பொழுது கூடும்.அதன் காரணம் இதுதான்.
  • துணிகளை வெயிலில் காய வையுங்கள்.இது என் தனிப்பட்ட அறிவுரை .
  • முடிந்த வரை சீக்கிரமாக வைத்தியத்திற்கான முயற்சிகளை எடுங்கள்.முதல் சருமத்தின் மாற்றத்தை எப்போது பார்க்கிறீர்களோ அப்போவே !
தொடர்ந்து வாசியுங்கள் !உங்கள் சந்தேகங்களை கேட்க, ஆலோசனை பெற ,
prithivimadhuconsultation(at)gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளுங்கள்.விரைவில் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.
இப்போது Youtube வீடியோ வடிவிலும் உங்களுக்காக !! லிங்கை கிளிக்குங்கள் .

Tuesday 3 September 2019

சபாஷ்..நன்னா பண்ணியிருக்கியே பா....

                                காலங்களிலே மிகவும் கொடுமையான காலம் எது தெரியுமா?இந்த படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திரிவது !!  "எங்கப்பன் என்ன இன்னா டார்ச்சர் பண்ணுனான் தெரியுமா இந்த வேலைகிடைக்காம தின்ன நேரத்துல "என்று எல்லா அப்பாக்(ன்)களும் தன் மகன் மகளிடம் புலம்புகிறார்கள்.ஆனால் ஏனோ தெரியவில்லை அவர்களும் அதையேத் தான் செய்கிறார்கள்.முரணாக தோன்றவில்லை?? அவர்களும் எத்துணை நாட்கள் தான் பாரத்தை தாங்குவார்கள் ..   நியாயம்தான் .அட வேண்டுமென்றா தெண்ட சோறு தின்னுகிறார்கள் பிள்ளைகள்?உங்க காலத்தில் பத்தாங்கிளாஸ் அவர்களுக்கு கிடைத்த வேலைக்கூட இந்த காலத்தில் ஒரு என்ஜினியர் பயலுக்கோ டாக்டர் பொண்ணுக்கோ கிடைப்பதில்லைங்க ..எங்க போவோம் நாங்க ?தேமேன்னு படிச்சுக்கிட்டு இருந்தோம் சமசீர் கல்வினானுங்க ,சரி கும்பலா நூத்துக்கு நூறெல்லாம் எடுத்து காட்டுனோம் ,நீட் தேர்வுனானுங்க ,முட்டியடிச்சி உள்ள நுழைஞ்சா பாஸ் ஆகவே ததிகிணத்தோம் ஆடவேண்டியதா இருக்கு ,டிஸ்டிங்க்ஷன்லாம் வாங்கிகிட்டு வெளிய வந்தா நெஸ்ட்டுன்றானுங்க ,நடு காட்டுல நின்னுகிட்டு முன்னாடி போனா  முட்டுவானுங்க பின்னாடி வந்தா ஒதைக்குறானுங்க,இந்த வம்பே வேணாம்னு பொறியியயாலானா ஆகலாம்னு பாத்தா எங்களுக்கு முன்ன ஒரு கூட்டமே வேலைஇல்லாம நிக்குது.அப்டே தாவி வங்கி துறைக்கு போனா வங்கிகள இணைச்சு பொருளாதாரத்தை சரிப்பன்னிட்டு இருக்காங்க .மீதமுள்ள ஆடிட்டர்,வக்கீல்,கலெக்டர் ,..வயசாகிடும்ங்க .இதுல எந்த பஸ்ஸ  புடிக்கறது ? எந்த ஊர்ல எறங்கறது ? 
spmadhu.blogspot.com VIP


                          
                              அதே நேரத்தில் பெற்றவர்கள் பக்கம் யோசித்தால் அவர்களும் பாவம் தான்.ஒரு இருபத்தி மூன்று,இருபத்தி ஆறு வயதில் தொடங்கும் இந்த குடும்ப ஓட்டம் ஐம்பது வயதை நெருங்கும்போது சலிப்பைத்தான் தரும் .இது போன்ற நேரத்தில் தான் நம் அயல்நாட்டின்  சில முறைகளே தேவலாம் என தோன்ற வைக்கிறது..!  Adulthood  என சொல்லப்படும் பதின்பருவத்திலேயே தனியே சம்பாரித்து  நிற்கும் திறன் அங்கே கற்பிக்கப்படுகிறது .யாரும் யாருக்காகவும் உழைத்து ஓடாய் தேயவேண்டாம்.அப்பா அம்மா சொத்து சேர்ப்பதில்லை.பிள்ளை அதனை எதிர்பார்ப்பதும் இல்லை.பகுதி நேர வேலை முழு நேர வேலை தர வேலைவாய்ப்பும் அங்கே தரப்படுகிறது.முக்கியமாக அதனை யாரும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை.இங்கே நாம் பகுதி நேரமாக ஓட்டலில் ஒரு மெடிக்கல் மாணவரோ ,என்ஜினியர் மாணவரோ வேலை பார்த்தால் அவ்வளவு தான் ..மரியாதை   போய்விடும் ,நேரமிருக்காது படிப்பதற்கு என பல சிக்கல்கள் .ஹும் ..என்று தீருமோ இந்த வேலை இல்லா பட்டதாரிகளின் நீல் டயலாக்ஸ் மற்றும் குமுறல்கள் !!


                        சரி !அது போகட்டும் .விஷயத்திற்கு வருவோம் .இப்போது புகுத்த விரும்புவதே 'பாராட்டைப்' பற்றித் தான்.அட!ஆமாம்ங்க !!இந்த பாராட்டிற்கு அதிக பவர் உண்டு..எப்படி? என்கிறீர்களா..'கோபம்'  என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தி என்று அடிக்கடி என் தாய் கூறுவார்.என்னை பொறுத்தவரையில் நேர்மறையாக சொன்னால் 'அன்பும்','பாராட்டும்' இரு பக்கமும் இனிப்பை தரக்கூடிய குல்ஃபீ  ஐஸ் போன்றது.மேலிருந்து கீழ் சாப்பிட்டாலும் கீழிருந்து மேல் வந்தாலும் சுவையானது.அன்பும் பாராட்டும் அப்படிதான்.கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் சந்தோஷத்தை அளிக்கக்கூடியது.ஒருவரிடம் அன்பாக நடந்துக் கொள்ளும்பொழுது அவர் முகத்தில் தோன்றும் சந்தோஷம் நம் ஆத்ம திருப்தியும். ஒருவரை மனமார பாராட்டும்பொழுதும் அவர்க்கு கிடைக்கும் திருப்தியும் நம் உற்சாகமும்.
Parenting-spmadhu.blogspot.com


             
                      உதாரணத்திற்கு ,அலுவலகத்தில் சக நண்பரிடம் ,'இன்று நன்றாக பிரசன்டேஷன் செய்தீர்கள் .அருமை'என்பது போன்ற பாராட்டுகளைத் தரும்பொழுது அவருக்கு ஒரு உற்சாகம் வரும்.செய்த உழைப்பிற்கு மனதிருப்தியை அது தரும்.உங்களுக்கும் ஒருவிதமான  நேர்மறை அலைகள் ,எண்ண ஓட்டம் வளரும்.ஒரு முதிர்ச்சி ,பக்குவம் அதில் வெளிப்படுவது.அன்று மதியம் லன்ச் உங்களுடன் சாப்பிட அவர் விரும்புவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
ஒரு குழந்தை தொண்ணூறு மதிப்பெண்களுடன் வந்து நிற்கும்பொழுது ,'பரவா இல்லையே !நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாய் .இன்னமும் உன்னால் வாங்க முடியும்.உழைப்புக்கு என்றுமே பரிசுண்டு ' என்பது போன்ற வார்த்தைகளை உதிர்க்கிறோம்.அடுத்த முறை அதை விட கடினமாக  உழைத்து நூறு எடுக்க முற்படும்.
Love-spmadhu.blogspot.com



                    எத்தனை கணவர்கள் தன் மனைவியிடம் ,'இன்று சாம்பார் ரொம்ப நல்லா  இருக்கு.நேற்று வைத்த பிட்ல நீங்க  செய்ததிலேயே பெஸ்ட்'என்று எத்தனை பேர் சொல்கிறார்கள் ?ஒரு ஓட்டப்பந்தய முடிவில் எத்தனை இரண்டாம் இடக்   குழந்தை முதல் இடம் வாங்கியவரிடம் போய் ,'நல்லாவே விளையாடினாய்.வாழ்த்துக்கள் !'என்று சொல்ல கற்றுக்கொடுக்கிறோம் ?நிஜத்தில் ,அப்படி சொல்ல வேண்டும்.அது ஒரு பக்குவப்பட்ட மனதின் ,வளர்ப்பின் வெளிப்பாடு..!
Joint family-spmadhu.blogspot.com



                    ஒரு உறவினர்  வீட்டிற்கு போகிறோம்.அமோகமாக வரவேற்று உணவு பரிமாறி சிரித்து மகிழ்ந்து விட்டு கிளம்புகிறோம்..ஒரு வார்த்தை ,'எல்லாமே சூப்பரா இருந்துச்சு.வயிறு நிறைய சாப்பிட்டோம் 'என்று சொல்லி பார்ப்போமே ..அவர்கள் முகம் சிவந்துவிடும்.வாசலில் வெல்கம் கோலத்திலிருந்து  கைத் துடைக்க கொடுத்த டிஷ்யூ பேப்பர் வரை எல்லாவற்றையும் நாம் கவனித்தோம் ..அதை சொல்லி வெளிப்படுத்துகிறோம் .அதுதான்.


                     பாராட்டும் பண்பு  என் அப்பாவுடைய குணம்.அதனுடைய தாக்கம் எனக்கு உண்டு.நான் செய்திருக்கிறேன் .பல மன முதிர்ச்சியுடைய பெருந்தன்மையான மனிதர்கள் பாராட்டுவதையும் நான் கண்டிருக்கிறேன் .அதனுடைய பலன் அலாதியானது .அதையே பகிர்ந்தேன்.பாராட்டுவோம் !நேர்மறை எண்ணங்களுடன் முன் செல்வோம் !உடன் உள்ளவர்களுக்கும் கை  கொடுத்து   நடப்போம் !